Sunday 18 November 2012

ஈசல் வாழ்க்கை

தென் தமிழ் நாட்டில் இன்றும் பல கோவில்களில் உள்ளே அனுமதிக்க ஜாதியம் பார்க்கின்றார்கள்....கர்நாடகாவில் கூட ஒரு புகழ் பெற்ற கோவிலில் ஜாதி பெயர் கேட்டு தனிதனியே அன்னதானத்திற்கு அனுமதிப்பார்கள்..
.
தென் தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட ஒரு கோவிலில் வெளியே செருப்பு விடும் போது கவனித்தேன்...கோவில் வாசலில் இருந்த tubelightல் மேலே பெரிய எழுத்தில் உபயதாரர் பெயர் இருந்தது... அதை விட பெரிய எழுத்தில் அவரின் ஜாதி பெயர் இருந்தது அவர் பெயருக்கு பக்கத்திலேயே... 300 ருபாய் tubelight..ஆனால் பெயிண்ட் அடிக்க மட்டும் 30 ருபாய் செலவு செய்து இருப்பார் என நினைத்து கொண்டே சாமி பார்க்க உள்ளே சென்று விட்டேன்..
 
சாமி பார்த்துவிட்டு திரும்புவதற்குள் இருட்டிவிட்டது....இரவு நேரம் ஆனதால் விளக்கை போட்டு இருந்தனர்... அப்போது மீண்டும் வாசலை கவனித்தேன்....
 
 ஒரு நாள் மட்டுமே வாழும் விட்டில் பூச்சி (ஈசல் பூச்சி) tubelightல் மேலே இருந்த அவரின் ஜாதிப்பெயரை மட்டும் மறைத்து இருந்தது...
 
ஈசல் பூச்சிக்கு கூட தெரிகிறது...மனிதனுக்கு தான் தெரியவில்லை...

No comments:

Post a Comment